ஞாயிறு, 28 டிசம்பர், 2008

இன்று ஒரு தத்துவம் (28/12/2008)

நம்பிக்கை உள்ளவங்க பட்ற கஷ்டம். மண்ணுல விதை விதைச்சுட்டு அது முளைக்கறதுக்கு எதிர்பார்க்கற மாதிரி. நம்பிக்கை இல்லாதவங்க பேசற பேச்சு ஒரு பாறை மேல விதையை தூவிட்டு அது முளைக்காதுனு சொல்றமாதிரி.

ஒண்ணு தெரிஞ்சு காத்திருக்கற நம்பிக்கை; இன்னொன்னு தெரிஞ்சே செய்த தப்பு...

நம்பிக்கை எப்பவும் வீண் போகாது...

சனி, 27 டிசம்பர், 2008

சாணியடிச் சித்தர்

மனித உடலுக்கும் சாணிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே எரித்த உடன் சாம்பலாகத்தான் மாறுகிறது. சாம்பலில் முடிகின்ற மனித வாழ்வை அர்முள்ளதாய் ஆக்கிக் கொள்ள இங்கே சில தத்துவங்கள்... உங்களுக்காக